3 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் இறங்கும் இயக்குனர் லிங்குசாமி…!படத்தோட ஹீரோ,ஹீரோயின் இவங்க தானாம்!!!

0

அஞ்சான் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் லிங்குசாமி அவர்கள். தற்போது அவருடைய புதிய படத்திற்கான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ராம் பொத்தினேனி மற்றும்  கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளனர். மேலும்  இயக்குனர் லிங்குசாமி 3 வருட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம் இயக்க உள்ளது அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் லிங்குசாமி அவர்கள் ஆனந்தம் படம் மூலம் திரையில் ஒரு இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்றது. மிகவும் அழகான குடும்பகதையாக அமைந்து பார்ப்பவர்கள் மனதில் ஒவ்வொரு காட்சியும் ஆழமாக பதிந்தது. அதை தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் லிங்குசாமி. மேலும் பல  படங்களை தயாரித்தும் உள்ளார். இதனிடையே கடந்த 2018 ஆம் வெளியான சண்டக்கோழி-2 படத்திற்கு பின் எந்த படங்களும் அவரின் படைப்பில் உருவாகவில்லை.

இந்நிலையில் தற்போது அவரின் அடுத்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது அவரின் இந்த புதிய படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் பொத்தினேனி நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி இணையவுள்ளார். இந்த படத்தை  ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகிற ஜூலை 12ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வெற்றி நாயகனின் இந்த புதுப்பட அப்டேட் அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here