தமிழ் சினிமாவில் சண்டக்கோழி, வேட்டை, அஞ்சான் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி ஆக்டிங்கில் தி வாரியர் என்ற திரைப்படம் வெளியாகியது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகியது. ஆனால் இந்த படம் சொல்லிகொள்ளும் அளவிற்கு ரீச் ஆகவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரிடம் செய்தியாளர் சந்திப்பின் போது சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. அதாவது இவரிடம் தெலுங்கு நடிகர் ஆக்ட்டிங்கில் தமிழ் படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால் இதே மாதிரி தமிழ் நடிகரை வைத்து தெலுங்கில் படம் வெளியிட முடியுமா? என கேள்வி எழுப்பினர்.
வாரிசுக்கு வந்த சிக்கல்.., விஜய்க்கு ஆப்பு வைத்த உதயநிதி.., உண்மையை உடைத்த முன்னாள் அமைச்சர்!!
அதற்கு லிங்குசாமி சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து அனைத்து இயக்குனர்களும் பல்வேறு மொழிகளில் படங்களை இயக்கி வருகின்றனர். ஆனால் இந்த காலத்தில் இது போன்ற பிரச்சனைகளை கிளப்புவது சரியில்லை. மேலும் இது போன்ற பிரச்சனைகள் வந்தால் பல தடாலடியான முடிவு எடுக்கப்படும் என லிங்குசாமி மறைமுகமாக எச்சரித்துள்ளார்.