நான் அதை பாக்குறவன் கிடையாது, என்ன நெனச்சாலும் எனக்கு கவலை இல்ல .., முக்கிய பிரபலத்தை வெளுத்து வாங்கும் கெளதம்!!

0
நான் அதை பாக்குறவன் கிடையாது, என்ன நெனச்சாலும் எனக்கு கவலை இல்ல .., முக்கிய பிரபலத்தை வெளுத்து வாங்கும் கெளதம்!!
நான் அதை பாக்குறவன் கிடையாது, என்ன நெனச்சாலும் எனக்கு கவலை இல்ல .., முக்கிய பிரபலத்தை வெளுத்து வாங்கும் கெளதம்!!

இயக்குனர் கெளதம் மேனன் குறித்து விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பேசியது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் கெளதம் மேனன் :

இயக்குனர் கெளதம் மேனன் படைப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் அமோகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த செப் 15ல் வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை தந்தாலும், ரசிகர்களிடையே சில கலவையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த வகையில் சமீபத்தில் புளு சட்டை மாறன் சிம்புவின் உருவத்தை குறித்து பேசி சர்ச்சையை கிளப்பினார். இதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து கூறி வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட கெளதம் மேனன், மற்ற இயக்குனர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் எனக்கு அவரை இறங்கி அடிக்கணும் போல இருக்கிறது என்று ப்ளூ சட்டை மாறனை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதற்கு ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், மின்னலே படத்தில் கௌதமாக அறிமுகமாகி பின்னர் ஜாதி பெயரான மேனன் என்று இணைத்து கெளதம் மேனன் என்று சேர்த்துக் கொண்டார் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நான் பிறக்கும் பொழுதில் இருந்து என்னுடைய பெயர் கௌதம் மேனன் தான் என்று உரைக்க கூறினார்.

நடிகருடன் ரகசிய திருமணம்.,, கர்ப்பத்தை அறிவித்த சன் டிவி சீரியல் நடிகை!!

அதுமட்டுமின்றி நான் எடுத்த முதல் படத்தில் முழு பெயர் தான் டைட்டிலில் வைத்திருந்தேன். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் சங்கர் போல் பெயரை சுருக்கமாக கெளதம் மட்டும் வைத்து கொள்ளலாம் என்று கூறினார். இதனை தொடர்ந்து நான் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் கன்ட்ரோல் எல்லாம் என் பக்கம் இருந்ததால் முழுப்பெயர் கெளதம் மேனன் வைத்தேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் என்னை ஜாதி பார்ப்பவன் என்று நீங்கள் நினைத்தால் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று மாறனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here