37 வருடங்களுக்கு பிறகு ரீமேக்காகும் பிரபல இயக்குனரின் திரைப்படம்.., ஹீரோ, ஹீரோயின் யாருன்னு தெரியுமா?

0
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!

கோலிவுட் வட்டாரங்களில் மிகப் பிரம்மாண்டமான இயக்குனராக ரசிகர்கள் கொண்டாடப்படுபவர் தான் பாக்யராஜ். அவர் இயக்குவது மட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து பிரபலமானார். அந்த வகையில் கடந்த 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து பல மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கி உள்ள பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை இயக்குனர் என்று பெயர் எடுத்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி பெருமையை அடைந்த பாக்யராஜ் ஒரு கட்டத்தில் தான் இயக்கும் படங்களில் தானே நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதன்படி இயக்கிய 27 படங்களில் 24 படங்களில் அவரே இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு திரைப்படம். இப்படத்தில் மனைவியை இழந்து கைக்குழந்தையுடன் வாத்தியார் வேலையை பார்க்க கிராமத்துக்கு வரும் பாக்யராஜை காதலித்து வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து கொள்வார் ஊர்வசி.

கனவு கோட்டை கட்டும் அட்லீ.., எனக்கு 500 கோடிலா மேட்டரே இல்ல.., வித்தைக்கார ஜாம்பவானின் தெனாவட்டு பேச்சு!!

இந்த படத்தில் பெண் அனுபவிக்கும் கஷ்டங்கள் சந்தோஷங்கள் என அப்படியே வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார் பாக்யராஜ். இந்த நிலையில் இப்படத்தின் ரீமேக்கை உருவாக்க இயக்குனர் பாக்யராஜ் களமிறங்கியுள்ளார். மேலும் இந்த ரீமேக்கில் பாக்கியராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் நடிக்க இருக்கிறார். ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க கமிட்டாகியுள்ளனர். புதிதாக இணையும் இந்த காம்போவிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here