அட்லீ இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஜவான்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவை பாலிவுட்டிற்கு கொண்டு சென்றுள்ள அட்லீ தன் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, ‘ஏற்கனவே பார்த்த கதைகளை எடுக்கிறேன் என்பது தான் என் மீது வைக்கப்படும் ஒரே விமர்சனம் ஆகும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பா.ரஞ்சித், லோகேஷ் போன்ற நண்பர்கள் சமூகப் பிரச்சனைகளை படமாக எடுக்கின்றனர். ஆனால், நடிகர்களை மையமாக வைத்து எடுக்கும் மாஸ் கமர்சியல் திரைக் கதைகள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். அதனால் என் மீது விமர்சனம் வரத்தான் செய்யும். பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை கொடுத்து அவர்களை எமோஷனல் ஆக்குவது தான் என் நோக்கம். அதை நான் நன்றாகாவே செய்கிறேன் என்று நினைக்கிறன்’ என கூறியுள்ளார்.