இயக்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் தற்போது அவர் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் அட்லீ:
தமிழ் சினிமாவில் காலெடுத்து வைத்த கொஞ்சம் காலத்திலே தொடர்ந்து வெற்றி கொடியை நாட்டி வருபவர் தான் இயக்குனர் அட்லீ. தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவர் விஜய்யை வைத்து படம் எடுக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து தன்னுடைய மகனுக்கு மீர் என பெயர் வைத்துள்ளார். இந்த பெயர் ஷாருக்கானின் தந்தையின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அட்லீ புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
கேவலம் பணத்துக்காக ராஷ்மிகா மந்தனா செய்த காரியம் – வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!!
அதாவது, இயக்குனர் அட்லீ மும்பையில் கிட்டத்தட்ட ரூ. 38 கோடி செலவில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம். குழந்தை பிறந்த அதிர்ஷ்டமோ தெரியவில்லை பெரிய செலவில் வீட்டை வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் மும்பையிலேயே செட்டிலாக போகிறாரா என்பது போல் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு முன்னர் சூர்யாவும் மும்பையில் வீடு வாங்கியது குறிப்பிடத்தக்கது.