திரைப்பட இயக்குனர் அட்லி மற்றும் ப்ரியா தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இயக்குனர் அட்லி
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை இயக்கி இருந்தாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குனர் அட்லி. ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரை இயக்குனராக அறிமுகமான அட்லிக்கு மக்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில், கை தொட்டதெல்லாம் துலங்கும் என்பதை போல, அட்லியின் இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களால் பேசப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி பல வெற்றிகளை பெற்று மக்களால் பேசப்பட்ட இயக்குனர் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல சின்னத்திரை நடிகை ப்ரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து இருவரும் அப்பா, அம்மா ஆகப்போவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து கடந்த மாதம் அட்லி மனைவி பிரியாவுக்கு வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் நடிகர் விஜய் பங்குபெற்றிருந்தார். இப்படி இருக்க, அட்லி மனைவி ப்ரியாவுக்கு இன்று அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாக, ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அட்லி மற்றும் ப்ரியா தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.