தமிழகத்தில் தொடரும் மாணவிகள் இறப்பு., அரசுக்கு பெரும் தலைகுனிவு – பிரபல இயக்குனர் விமர்சனம்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அமீர், தமிழகத்தில் தொடரும் பள்ளி மாணவிகள் இறப்பு குறித்து, பரபரப்பு விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இயக்குனர் விமர்சனம்:

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி, தற்கொலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறப்பில் மரணம் இருப்பதாக, மாணவியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இது சம்பந்தமாக வெடித்த கலவரத்தின் பேரில், தற்போது அரசு விசாரணை தொடங்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர் அமீர், இந்த விவகாரத்தில் உடனடியாக மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் இது அரசுக்கு பெருத்த தலை குனிவு என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், பள்ளி நிர்வாகத்தின் மீது எடுக்கும் நடவடிக்கைகளை விட போராட்டக்காரர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை தான் அதிகமாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் கருத்துக்கள், சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here