
இயக்குனர் அமீர் ஆஸ்கர் விருது குறித்து சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இயக்குனர் அமீர்:
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அமீர். இவர் இயக்கிய மௌனம் பேசியதே, ராம் மற்றும் பருத்திவீரன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆஸ்கர் விருது குறித்து பேசியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அவர் பேசியதாவது, ஆஸ்கர் விருது என்பது பெரிய விருது என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட விருதுகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் எல்லா விருதுக்கு பின்னாடியும் அரசியல் இருக்கிறது. ஏன் சிவாஜி கணேசன் காலகட்டத்திலும் விருது பின்னாடி அரசியல் இருந்தது.
இந்திய சினிமா மட்டுமின்றி உலகத்திலேயே சிவாஜி கணேசன் மாதிரி ஒரு நடிகர் இருக்கவே முடியாது. ஆனால் அவருக்கு ஒரு தேசிய விருது கூட கொடுக்கலையே. இதிலிருந்து என்ன தெரிகிறது ஒவ்வொரு விருதுக்கு பின்னாடி அரசியல் தான் இருக்கு என்று கூறியுள்ளார். மேலும் ரஜினிக்கு தேசிய விருது கொடுத்தீங்களே, அவரு என்ன சிவாஜியை விட பெரிய நடிகரா? என்று காரசாரமாக பேசியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .
View this post on Instagram