இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு போனது தொடர்பாக ஒருவர் கைது செய்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவில் 3 என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் தான் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதாவது நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 பவுன் மதிப்புள்ள தங்க,வைரம் திருடு போன சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு போனது தொடர்பாக ஒருவர் கைது செய்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சமையல் காரியாக வேலை பார்த்த ஈஸ்வரி என்ற பெண் தான் திருடியதாக காவல்துறை கண்டுபிடித்துள்ளது. அவரின் வங்கி பரிவர்த்தனையில் லட்ச கணக்கில் பணம் கைமாறியது அடிப்படையில் அவரை கைது செய்துள்ளனர்.
அவரை விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்தது. அதாவது ஈஸ்வரிக்கு மூன்று மகள்கள் உள்ளதாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், கடந்த 2019 ல் இருந்து நகையை சிறுக சிறுக திருடி விற்று அந்த பணத்தில் நிலம் வாங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.