இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டிலிருந்து நகைகள் திருட்டு போன சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் 3, வை ராஜா வை போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் லீடு ரோலில் நடிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. மேலும் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்த வைர நகைகள், தங்க நகைகள், நவரத்தின கல் என கிட்டத்தட்ட 60 பவுன் நகைகளை காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.