சமீப காலமாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பல்வேறு வழக்குகளில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல் கனி ராஜாவின் கொடைக்கானல் ரிசார்ட்டில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு தென்சென்னையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்துடன் வந்து இந்த ரிசார்ட்டில் தங்கி இருந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ராஜசேகர் தனது உறவுக்கார பெண் (சுமார் 40 வயது) ஒருவரை மட்டும் அந்த ரிசார்ட்டில் தனியே விட்டுவிட்டு மற்ற அனைவரும் சுற்றுலா பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இந்த நேரத்தில் அங்கு வந்த அப்துல் கனி ராஜா அந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக அந்த பெண் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஓய்வூதிய திட்டம்., அரசு ஊழியர்களுக்கு 12 சதவீதம் வரை வருமானம்., வெளியான முக்கிய தகவல்!!!
இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் அப்துல் கனி ராஜாவை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் அப்துல் கனி ராஜாவை 15 நாட்கள் காவல் விசாரணையில் வைக்க உத்தரவிட்டனர். தேர்தல் நெருங்கி வரும் காலங்களில் இந்த சம்பவம் அரங்கேறியது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.