டிஜிட்டல் மீட்டருக்கு பதில் ஸ்மார்ட் மீட்டர் முறை …!மின்சாரத்துறை அமைச்சர் தகவல் !!!

0

தமிழகத்தில் தற்போது டிஜிட்டல் மீட்டர்  முறையில் மின் கணக்கீடானது செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் ஒரு தகவலை தெரிவித்து உள்ளார். அதாவது, மின் துறையில் ஏற்பட்டு உள்ள இழப்பை சரி செய்ய மின் கணக்கீட்டிற்கு ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, கடந்த ஆட்சியில் 9 மாத காலமாக எந்த வித மின் சம்பந்தப்பட்ட பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அதனை  சீரமைக்கும் மற்றும் பராமரிக்கும்  பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனாலேயே மின்தடை ஏற்படுகிறது. 10 நாட்களுக்கு மின்தடை பிரச்சனை இருக்கும். அதன் பிறகு சரி செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து  இந்த அரசு , 10 நாட்களில் மின் பராமரிப்பு பணியை செய்து முடித்து மின்தடை பிரச்சனையை முடித்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், மின் துறையில் ரூ.900 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் , இந்த இழப்பை சரி செய்ய மின் கணக்கீடு செய்ய டிஜிட்டல் மீட்டர் முறைக்கு  பதிலாக ஸ்மார்ட் மீட்டர் முறை கொண்டு வரப்படும்  என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இந்த வாரியத்தில் இழப்பை சரி செய்ய ஆய்வு மேற்கொண்டு சீர்திருத்தங்கள் செய்ய  நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மேலும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here