இப்போ நாங்க தான் டாப் – கெத்து காட்டும் மத்திய அரசின் தூர்தர்சன் சேனல் (DD National)..!

0

கொரோண காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியாவில் இந்த வைரஸால் 5700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 166 பேர் உயிரிழந்துள்ளனர், 473 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிடையே வீட்டிற்குள் இருக்கும் மக்களின் பொழுதைபோக்க முடிவெடுத்து களமிறங்கிய தூர்தர்ஷன் இன்று அனைவராலும் அதிகம் பார்க்கப்பட்ட சேனலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்று அறிவித்துள்ளது BARC.

மத்திய அரசின் தூர்தர்சன்:

கொரோனாவால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.ரயில், பஸ் போக்குவரத்து, அரசு, தனியார் அலுவலகங்கள் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். சிறிய மளிகை கடை, காய்கறி கடை, மருந்து கடை, பால் விற்பனை, பத்திரிகைகள்  உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அரசு அனுமதித்துள்ளது,அத்தியாவசிய சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் தவிர ஏராளமான நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன.

சுற்றுலா துறைகள்,  வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் நாடு மக்கள்  விட்டிலேயேமுடங்கியுள்ளனர்மக்களின் பொழுதை போக்குவதற்காக வரலாற்றின் சிறப்புகளை அறியவும் மத்திய அரசு வழிவகை செய்தது பழைய இதிகாச தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப முடிவெடுத்தது தூர்தர்ஷன் சேனல்.

விஸ்வரூபம் எடுத்த தூர்தர்சன்

மத்திய அரசின் தர்ஷன் தொலைக்காட்சியில், ராமாயணம், மகாபாரதம்,சக்திமான், புனியாத் ஆகிய  வராலாற்று காவியங்கள் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, தூர்தர்ஷன் சேனலின் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கடத்த வாரத்தில் பெருமளவு அதிகரித்துள்ளது.

இந்த தொடர்களை மக்கள் ஆர்வத்துடன் பார்த்ததால், பார்வையாளர்கள் சதவீதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு 40 ஆயிரம் சதவீத வளர்ச்சியை தூர்தர்ஷன் சேனல் பெற்றுள்ளதாகத் தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு அமைப்பு (BARC) தெரிவித்துள்ளது.தனியார் சேனல்களின் அதிகரிப்பால் நீண்ட காலமாக பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பின் தங்கி இருந்த தூர்தர்ஷன் கடந்த ஒருவாரத்தில் லட்சக்கணக்கிலான பார்வையாளர்களைப் பெற்று தனியார் சேனல்களை வாய்ப்பிளக்கவைத்துள்ளது தூர்தர்சன்.

தூர்தர்ஷன் சேனலில் ராமாயண் மார்ச் 21- மார்ச் 27-ம் தேதி வரையிலான வாரத்தில் ராமாயணத்துக்கு 1.2 மில்லியன் பார்வையாளர்கள் இருந்த  நிலையில், அடுத்த வாரம் மார்ச் 28-ம் தேதி தொடங்கிய வாரத்தில் அதன்பார்வையாளர்கள் 545.8 மில்லியனாக அதிகரித்துள்ளது அதேபோல, மகாபாரதமும், 0.4 மில்லியன் பார்வையாளர்களிலிருந்து 145.8 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது, சக்திமான், ஸ்ரீமன் ஸ்ரீமதி, ஷாருக்கானின் சர்க்கஸ் போன்ற பழைய தொடர்களும் பெரும் வரவேற்பைப்  பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வாரத்தில் சக்திமானுக்கு 0.4 மில்லியன் பார்வையாளர்கள் இருந்த நிலையில் அடுத்த வாரத்தில், 20.8 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்,

ஷாருக்கான் நடித்திருக்கும் சர்க்கஸ் 0.2  மில்லியன் பார்வையாளர்களிலிருந்து 0.8 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. காலை 9 மணி முதல் 10.30 வரையிலான நேரத்தில் 580 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இது, தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் 39,000 சதவீத  வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது என்று பார்க்(BARC)  என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 ஏப்ரல் 9 மணிக்கு 9 நிமிடம்

கடந்த ஏப்ரல் 5 (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து மக்களும் இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து தீபம் ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டார். அந்த 9 நிமிடங்கள்தான் நாட்டிலேயே மிகக்குறைவான பார்வையாளர்கள் தொலைக்காட்சியை பார்த்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுக்குப் பின் குறைந்த அளவு பார்வையாளர்களை இந்திய தொலைக்காட்சி சேனல்கள் பெற்றது அன்றுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here