நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் பிளே ஆப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. இதை தொடர்ந்து இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளனர். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் CSK அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் மூன்று அணிகளும் ஐபிஎல் பட்டத்தை வெல்ல வேண்டும் என தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மகேந்திர சிங் தோனி சேப்பாக்கம் மைதான பணியாளர்கள் அதிர்ச்சியாகும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார். அதாவது சேப்பாக்கம் மைதானத்தில் 20 களப்பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
ஐயையோ காவியா.., விலகி இருக்குறது கூட தெரியமா இப்டி பண்றீங்களே.., திண்டாடும் இளசுகள்!!
இந்த 20 பேருடனும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தனித்தனியாக சந்தித்து பேசி அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளார். மேலும் அவர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டு கொடுத்து, அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாக தோனி ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.