டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டம் உள்ளதா என்பது குறித்து அவரது மேனேஜர் மிஹிர் திவாகர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்திய முன்னாள் கேப்டன் தோனி..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். தோனி இப்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய தோனி அதன் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐபிஎல் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் தோனி மறுபடியும் இந்திய அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாகி உள்ளது.
மனைவி பிறந்த நாள் அன்று குழந்தையின் பெயரை பகிர்ந்து கொண்ட உசைன் போல்ட்..!
தோனியின் ஓய்வு திட்டம் குறித்து அவரது மேனேஜர்..!
தோனியின் மேனேஜர் மிஹிர் திவாகர் கூறும்போது, நண்பர்களான நாங்கள் அவரது கிரிக்கெட் குறித்து பேசுவது கிடையாது. ஆனால் அவரை பார்க்கும் போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் குறித்து யோசித்த மாதிரி தெரியவில்லை. ஐ.பி.எல். போட்டியில் விளையாட அவர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார் அதற்காக உண்மையிலேயே கடுமையாக உழைத்தார்.
தோனி தற்போது அவரது பண்ணை வீட்டில் அதிக நேரத்தை செலவிட்டு வரும் டோனி உடல் தகுதியை நன்றாகவே கவனித்து வருகிறார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் அவர் பயிற்சியை தொடங்குவார் என்று தெரிவித்தார்.