தோனி பாணியில் ஹர்திக் பாண்டியா…, அப்போ அடுத்த உலக கோப்பை நமக்கு தானா??

0
தோனி பாணியில் ஹர்திக் பாண்டியா..., அப்போ அடுத்த உலக கோப்பை நமக்கு தானா??
தோனி பாணியில் ஹர்திக் பாண்டியா..., அப்போ அடுத்த உலக கோப்பை நமக்கு தானா??

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்ற பிறகு ஹர்திக் பாண்டியா பேசிய கருத்துக்கள் தோனி பேசியதை போல் இருப்பதாக அஸ்வின் தெரிவித்து உள்ளார்.

ஹர்திக் பாண்டியா:

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில், 2 போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டதால், பிளேயிங் லெவனில், சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரன் மாலிக் உள்ளிட்ட சில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை என்று ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, பேட்டி ஒன்றில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறாத வீரர்கள், எந்த ஒரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், நான் கேப்டனாக இருக்கும் போது, என் அறை கதவுகள் எப்பொதும் திறந்தே தான் இருக்கும். சக வீரர்கள் என்னிடம் ஏதாவது பேச வருவார்கள் என்பதற்காக தான் இவ்வாறு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா…, 3 ம் இடத்திற்காக ஸ்பெயினுடன் பலப்பரீட்சை!!

இது போல தான், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், சக வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதிலிருந்து, ஹர்திக் பாண்டியா தோனியின் வழியை பின்பற்றி வருகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதே போல, இந்திய அணிக்கு உலக கோப்பையும் ஹர்திக் பாண்டியா வென்று கொடுத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here