தேசிய விருது நாயகன் தனுஷின் படமான ஜகமே தந்திரம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் அடுத்து இவர் நடிப்பில் வரவிருக்கும் படத்திற்கான படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தனது அண்ணனின் இயக்கத்தில் நடிக்க இருந்த படப்பிடிப்பு தள்ளிப்போகவே வேறு ஒரு புதிய திட்டத்தை வகுத்துஉள்ளார் தனுஷ்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஜகமே தந்திரம் ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இதை தொடர்ந்து நெட்ப்ளிக்ஸ் அடுத்த தயாரிப்பான ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பின் வேலைகளும் நடந்து முடிந்தது. இதையடுத்து இன்னும் பெயரிடப்படாத படத்தில் தனுஷின் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் D43 படத்தின் வேலைகளும் 40 சதவீதம் முடிந்து விட்டது. அடுத்ததாக தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘நானே வருவேன்’ படமானது வெறும் பஸ்ட் லுக் போஸ்டருடன் நிறுத்தப்பட்டு உள்ளன.
மேலும், செல்வராகவன் தான் ஹீரோவாக நடிக்கும் ‘சாணிக் காகிதம்’ படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிக் கொண்டே போவதால் தனுஷின் இந்த படத்தை ஆரம்பிக்க முடியாத நிலைக்கு செல்வராகவன் தள்ளப்பட்டுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய தம்பி அண்ணாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு தனுஷ் தான் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் உடன் போடப்பட்ட D44 படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வந்து உள்ளன.
மேலும் D44 படத்தின் அறிவிப்பானது வெளிவந்து 2 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார்.மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத். தனுஷ் உடன் மீண்டும் இப்படி ஒரு மாஸ் கூட்டணி இணையுள்ளது.
Facebook =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!