நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பிரபலமான இயக்குனருடன் இணைத்து திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் தனுஷ்
இயக்குனர் ராஜாவின் மகன் தான், நடிகர் தனுஷ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தனது அண்ணன் செல்வ ராகவன் இயக்கிய “தேவதையை கண்டேன்” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் அது வரை எந்த இயக்குனரும் கவனம் செலுத்ததாக கதையாக இருந்தது. அதே போல் நடிகர் தனுஷ் மிகவும் எதார்த்தமாக நடித்ததால் அந்த திரைப்படம் மிக பெரும் வெற்றியினை பெற்றது.
சிம்புவின் “மாநாடு” படத்தின் மாஸ் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
பின், தனுஷ் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் திரைப்படங்களில் தற்போது வரை நடித்து வருகிறார். குறிப்பாக, அவரது திரைப்படங்கள் அனைத்தும் சமூக கருத்துக்களை கொண்டுள்ளது. இவர் கடைசியாக நடித்த “கர்ணன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து மாரி செல்வராஜுடன் தனுஷ் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Elated to announce that after the blockbuster success of Karnan, Mari Selvaraj and myself are joining hands once again. Pre production going on,
Shoot will commence next year.— Dhanush (@dhanushkraja) April 23, 2021
அந்த படத்திற்கான ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியினை அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முதற்கட்ட தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.