கடந்த சில மாதமாக காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பெரும்பாலனோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவை வழக்கமான வைரஸ் காய்ச்சல் என்று அலட்சியமாக இருந்த வேளையில் பல்வேறு மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இதய நோய், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் கர்நாடகா, ஹரியானவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஒருவரை உயிரிழக்க செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் மத்திய சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர். அதாவது சுமார் 25% பேர் அடினோ வைரசாலும், 75% பேர் இன்ஃப்ளூயன்ஸா வகையை சேர்ந்த வைரசாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் இதில் 3% பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(15.03.2023) – முழு விவரம் உள்ளே!!
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறுகையில், “தமிழகத்தில் பெரும்பான்மையாக இன்ஃப்ளூயன்ஸா வகையை சேர்ந்த H3N2, H1N1 என்ற வைரஸ் மட்டுமே பரவி வருகிறது. இதனால் முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் அலட்சியம் கொள்ளாமல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா வகையை சேர்ந்த வைரஸ் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.