டென்மார்க் ஓபன் சூப்பர் 750: இந்தியா அணி அபார வெற்றி..!! – அனைத்து போட்டியிலும் அசத்தல்..!!

0
டென்மார்க் ஓபன் சூப்பர் 750: இந்தியா அணி அபார வெற்றி..!! - அனைத்து போட்டியிலும் அசத்தல்..!!

டென்மார்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி தென் கொரியா ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

டென்மார்க் ஓபன் 2022:

டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடர் வருகிற 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இன்று கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி கொரியாவின் காங் மின் ஹியூக் மற்றும் சியோ சியுங் ஜே ஜோடியை எதிர்கொண்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 21-15, 21-19 என்ற கணக்கில் இந்திய கலப்பு ஜோடி வெற்றி வாகை சூடியது. முன்னதாக இதில் முன்னாள் சாம்பியன் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் என்ஜி கா லாங் அங்கஸை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஹாங்காங் வீரரை 17-21, 21-14, 21-12 என்ற கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வீழ்த்தினார்.

WC T20 2022..! – இந்திய அணியின் பலம், பலவீனம் இது தான்.., மேட்சுக்கு முன்னாடி முழுசா தெரிஞ்சுக்கோங்க..!!

இதர ஆட்டங்களில் கலப்பு இரட்டையர் பிரிவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 21-15 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் அலெக்ஸாண்ட்ரா போஜே, அமாலி மகேலுண்ட் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மேலும் இத்தொடரில் அடுத்து நடக்கவிருக்கும் ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் சீனாவின் சாவோ ஜுன்பெங்கை எதிர்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here