அமெரிக்காவை தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. அதுவும் தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட மாநிலங்களில் டெல்டா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தான் தற்போது உலகின் பல்வேறு நாடுகளின் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. முதல் அலை முடிந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியாவில் இரண்டாம் அலை ஏற்பட்டு லட்ச கணக்கில் உயிர் இழப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த டெல்டா ரக கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா பிளஸ் வைரஸாக மாறியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் டெல்டா ரக வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்த டெல்டா வைரஸ் பரவலின் வேகம் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் வேகம் தொடர்ந்து குறைந்து வருவதால் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் தொடர்ந்து நான்காவது நாளாக டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 27,237 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அமெரிக்காவின் இந்நிலை உலக மக்கள் அனைவர்க்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்