கொரோனா தொற்று அதன் வீரியத்தை கடந்த ஆண்டு முதல் காட்ட தொடங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு அதன் இரண்டாம் அலை தற்போது நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த இரண்டாம் அலைக்கு காரணமாக கருதப்படுவது டெல்டா எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் தான் அந்த வகையில் தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய வகை வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா என்னும் கொல்லுயிர் இந்தியாவை மட்டுமல்லாமல் உலக நாடுகளை தன்வசப்படுத்தி முதல் மற்றும் இரண்டாம் அலையாக தன் வீரியத்தை பெருகி கொண்டே வந்தது. தற்போது இரண்டாம் அலை பரவல் சற்று குறைந்த வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த அலைக்கு காரணம் உருமாறிய கொரோனா வைரஸ் அதாவது டெல்டா வைரஸ் ஆகும்.
அதாவது இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்கு காப்பா என்றும், அதையடுத்து கண்டறியபட்டதற்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனம் பெயர் வைத்து உள்ளது. தற்போது மத்திய சுகாதாரத்துறை ஒரு எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதாவது டெல்டாவின் உருமாறிய வைரஸ் டெல்டா பிளஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது. அதாவது, தமிழ்நாடு, கேரளா, மத்தியப் பிரதேசம், மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களில் இந்த வைரஸ் அறியப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
மேலும் இந்தியாவில் இது வரை 40 பேருக்கு இந்த வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் அந்த 4 மாநிலங்களில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார செயலாளர் அம்மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்து உள்ளார். மேலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தகுந்த சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் , உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்