டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்: தடுப்பூசி போடாதவர்களுக்கு WHO வெளியிட்ட பகிர் தகவல்!!!

0

இதுவரை கடனறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகைதான் மிக வேகமாக பரவ கூடியது. மேலும் இந்த வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களிடையே இவ்வகை வைரஸ் அதிகம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மக்கள் தடுப்பூசி செலுத்தி தங்களை பாதுகாத்து கொள்வது போல கொரோனாவும் காலத்துக்கு ஏற்ப வேறு வேறு வகைகளில் தன்னை உருமாற்றி வருகிறது. இந்த உருமாற்றத்தால் கொரோனா முதல், இரண்டாம் அலை முடிந்து தற்போது மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இந்தியாவில் மிக தீவிரமாக ஏற்பட்ட இரண்டாம் அலைக்கு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறினர். தற்போது இந்த டெல்டா வைரஸ் மேலும் உருமாறி  டெல்டா பிளஸ் வைரஸாக மாறியுள்ளது. இந்த டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் தற்போது வரை 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது உலக சுகாதார நிறுவனம், இந்த டெல்டா ரக வைரஸ் பற்றி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் பிற கொரோனா வைரஸை காட்டிலும் வேகமாக பரவும் என்றும், அதுவும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மக்களிடையே இது அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது. மூன்றாம் அலையின் பயத்தால் இருக்கும் மக்களுக்கு இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here