கொரோனாவின் உருமாறிய வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனவாகும். இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரு அறிக்கையை தெரிவித்து உள்ளது. அதாவது தங்களின் நிறுவன தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவையும் எதிர்க்கும் திறன் கொண்டது என அறிவித்து உள்ளது. இதன் ஒரு டோஸ் தடுப்பூசியை அதிக வீரியத்துடன் செயல்படுவதாக கூறியுள்ளது.
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனாவை எதிர்க்கும் திறன் கொண்ட தடுப்பூசியை தயாரித்து உள்ளது. மேலும் அமெரிக்கா போன்ற நாடுகள் அவசரகால பயன்பாட்டிற்காக இந்நிறுவன தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது இந்த வகை தடுப்பூசி கொரோனாவின் உருமாறிய வகையான டெல்டா நோய்த்தொற்று மற்றும் தீவிர சுவாச கோளாறு நோய்யான சார்ஸ் வைரசுக்கு எதிராக வீரியத்துடனும் மற்றும் நீடித்து செயல்படுவதை தரவுகள் நிரூபிப்பதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சமீபத்தில் இந்த தடுப்பூசியை இந்தியாவிற்கு கொண்டு வருவது குறித்தான பேச்சுவார்த்தை மத்திய அரசுடன் நடந்து வருவதாகவும் , இந்த நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்தியாவில் பரிசோதனை தேவை இல்லை என மத்திய அரசு தெரிவித்தாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்து இருந்தது. மேலும் எட்டு மாதங்கள் வரை இந்த தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு திறன் நீடிப்பதாகவும் அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இந்த வகை தடுப்பூசி ஒரு டோஸ் மட்டுமே போடக்கூடிய தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்