மாநிலத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் அதிரடியாக மாற்றம் – அரசுக்கு பெற்றோர்கள் சங்கம் கோரிக்கை!!

0
மாநிலத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் அதிரடியாக மாற்றம் - அரசுக்கு பெற்றோர்கள் சங்கம் கோரிக்கை!!
மாநிலத்தில் பள்ளிகள் இயங்கும் நேரம் அதிரடி மாற்றம் - கல்வித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தலைநகர் டெல்லியில் பள்ளிகள் இயங்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பெற்றோர் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு கோரிக்கை:

டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்படும் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில், இன்று முதல் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டும் பள்ளிகள் இயங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது, அதேபோல் தலைநகர் டெல்லியிலும், பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என பெற்றோர் சங்க தலைவர் அபராஜிதா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, டெல்லியில் பெரும்பாலான பள்ளிகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் அல்லது  கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். விரைவில், இதுகுறித்து அரசு விரைவில் பரிசீலிக்க உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here