46 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியை ஆட்கொண்ட பேய் மழை – விமான நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்!!

0
மஞ்சள் அலர்ட்! அதிகரிக்கும் கனமழையால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - பயத்தில் மக்கள்!
மஞ்சள் அலர்ட்! அதிகரிக்கும் கனமழையால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - பயத்தில் மக்கள்!

இந்திய தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட 46 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பெய்து விமான நிலையம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் பருவ மழை சரியாக பொய்க்கவில்லை. ஆனால் இந்த வருடம் அதற்கு மாறாக பருவமழை தொடங்கிய முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் சில மாநிலங்களில் அதிதீவிர கனமழை பெய்து வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

46 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியை ஆட்கொண்ட பேய் மழை - விமான நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்!!
46 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியை ஆட்கொண்ட பேய் மழை – விமான நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்!!

இந்த சம்பவம் தான் இப்போது இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. இன்று காலை முதல் கொட்டி தீர்த்த கனமழையால் டெல்லி சாலைகள் ஆறு போல நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் டெல்லி விமான நிலையமே மிகப் பெரிய நீச்சல் குளம் போல மாறியுள்ளது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் மாற்றி விடப்பட்டுள்ளன.

46 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியை ஆட்கொண்ட பேய் மழை - விமான நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்!!
46 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியை ஆட்கொண்ட பேய் மழை – விமான நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்!!

இவ்வாறு திடீரென கனமழை பெய்ததால் விமான நிலைய வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்ததாகவும் விமான நிலைய குழுவினர் உடனடியாக செயல்பட்டு நிலைமையை சரி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் தலைநகரில் ஒரு சீசனில் பெய்த மழையில் இது தான் அதிகமாகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here