வாகனம் ஓட்டும் பொழுது போனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறை பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
விபத்து:
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சின்ன சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை போனில் மூழ்கி கிடக்கின்றனர். குறிப்பாக அருகில் என்ன நடந்தாலும் தெரியாத அளவிற்கு போனில் அப்டியே மூழ்கி போய் விடுகின்றனர் வருகின்றனர். மொபைல் போனை அதிகம் பயன்படுத்தும் நபர்களுக்கு டெல்லி காவல்துறை எச்சரிக்கை கொடுக்கும் விதமாக ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வீடியோவில் வாகனம் ஓட்டும் போது தொலைபேசியை பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்து , சாலையை கடக்கும் போதும், போன் யூஸ் பண்ணும் போது ஏற்படும் விபத்து, குழி இருப்பதை கவனிக்காமல் மொபைல் பயன்படுத்தி கொண்டே குழிக்குள் விழுவது போன்ற தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக அந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும் காவல்துறை இனி இந்த தவறுகளை செய்யாதீர்கள் என்று எச்சரித்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.