இந்தியாவில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அதனை சீர்குலைக்க டெல்லி பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது.மேலும் இதனால் டெல்லி முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு எடுத்து உள்ளது.
டெல்லியில் பயங்கரவாத அமைப்பு தாக்குதல்:
ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தின விழாவை கெடுக்க பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு Drone மூலம் தாக்குதல் நடத்த திட்டம் திட்டி உள்ளது. இந்த தகவல் உத்திர பிரதேசத்தில் பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இதனை டெல்லி போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
மேலும் இதனை கண்காணிக்க ட்ரோன் கட்டுப்பாடு மையம் ஒன்றை இந்திய விமானப்படை வீரர்கள் உருவாக்கி உள்ளனர். மேலும் சமூகவிரோதிகளின் இந்த சதித்திட்டத்தை முறியடிக்க டெல்லி முழுவதும் முழு அளவில் உஷார் நிலையில் இருக்க எச்சரித்து உள்ளது. மேலும் பொதுமக்களை செங்கோட்டையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நுழைய தடை விதித்து உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்