தலைநகரில் 2500 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பீதியில் உறைந்து போன சக அதிகாரிகள்!!

0

நம் நாட்டின் தலைநகரான டெல்லியில், 2500க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்குள்ள காவல் துறை அதிகாரிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அச்சத்தில் அதிகாரிகள்:

நம் நாட்டின் தலைநகரான டெல்லியில், ஜனவரி 1 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 2500 காவலர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 767 பேர் குணமடைந்து மீண்டும் தங்கள் பணியில் சேர்ந்துள்ளனர். டெல்லியில் தற்போது வரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தகுதியானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லி காவல் துறையின் செய்தித் தொடர்பாளரும்,  கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால்க்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாத காவல்துறையினர் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசியின்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்ள, அனைத்து காவல் அதிகாரிகள் ஆரோக்கிய சேது ஆப்பை பயன்படுத்த அறிவுரை செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here