மாநிலத்தில் விரைவில் தளர்த்தப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

0

நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா பாதிப்பு 10%க்கும் கீழ் குறைந்துள்ளதால், அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விரைவில் தளர்த்தப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அரசு அறிவிப்பு:

நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. மேலும், உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவலும் நாட்டில் தீவிரம் எடுத்துள்ளது. இதனால், பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் கடந்த 2ம் அலை வைரஸ் பரவலின் போது, மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து இந்த மாநிலம் மீள்வதற்குள் திடீரென மீண்டும் பாதிப்பு உயர தொடங்கியது.

தற்போது, அரசு எடுத்துள்ள தீவிரமான நடவடிக்கையால், தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. அண்மையில், இது குறித்து பேசிய மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, மாநிலத்தில் தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்துள்ளதால், அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விரைவில் தளர்த்தப்படும் என அறிவித்துள்ளார். இதனால், மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here