அனைத்து தனியார் அலுவலகங்களையும் மூட மாநில அரசு உத்தரவு – கொரோனா தொற்று எதிரொலி!!

0

கொரோனா பெருந்தொற்று காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து தனியார் அலுவலகங்களையும் மூடுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அலுவலகங்கள் மூடல்:

நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால் 2ம் அலையின் போது ஏற்பட்ட பாதிப்பை விட, தற்போதைய 3ம் அலையில் பாதிப்பு கொஞ்சம் குறைவாகவே இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். டெல்லியில் முழு ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என முதல்வர் கெஜ்ரிவால் அண்மையில் மக்களுக்கு நம்பிக்கை அளித்தார். இந்த நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 19,166 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில், ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், உணவகங்கள் ஆகியவை மூடப்படுவதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியானது. இதில் அத்தியாவசிய தனியார் நிறுவனங்கள் போக, மற்ற தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுவதாகவும், பணியாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here