புதிய தளர்வுகள்: தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்… முதலமைச்சர் ஒப்புதல்!!!

0
நாட்டில் வேகமெடுக்கும்  கொரோனா - பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்! மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்??
நாட்டில் வேகமெடுக்கும்  கொரோனா - பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்! மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்??

டெல்லியில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்று டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். மேலும் டெல்லி அரசு கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் தொழில்கள் மூடப்பட்டிருப்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்திருந்தார். தொழில்கள் மூடப்பட்டு மக்கள் தவிப்பதால் நீண்டகாலத்துக்கு ஊரடங்கை நீட்டிக்க முடியாது என ஏற்கனவே டெல்லி முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் நீட்டிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் குரூப் ஏ பணியாளர்கள் பணிபுரியும் அலுவலங்கள் 100 சதவீதத்துடனும், குரூப் பி பணியாளர்கள் பணிபுரியும் அலுவலங்கள் 50 சதவீதத்துடனும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் மெட்ரோ சேவை டெல்லியில் 50% பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கடைகள் மற்றும் மால்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க டெல்லியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here