காற்று மாசு மிகவும் அதிகரித்து வருவதால், வருகிற ஜனவரி 1ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பதாக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
அரசு உத்தரவு:
நம் நாட்டின் தலைநகர் டெல்லியில், காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவு பெருகி உள்ளது. இந்த காற்று மாசை கட்டுப்படுத்த, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு கண்டிசன்களை பிறப்பித்தும் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டப்படவில்லை. இதனால் மாநில அரசு, பல புதிய வழிமுறைகளை கையாண்டு வருகிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அதன்படி வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுக்கான அதிரடி உத்தரவு ஒன்றை டெல்லி அரசு பிறப்பித்துள்ளது. வருகிற ஜனவரி 1ம் தேதி வரை, தலைநகர் டெல்லியில் பட்டாசுகள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ விற்க தடை விதிக்கப்படுவதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். காற்று மாசை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.