டெல்லி பேரவைக்கு பிப்ரவரி 8ல் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர்

0
தலைமை தேர்தல் ஆணையர்

70 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.  இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது, 0 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்பட்டது. ஜனவரி 14-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here