தலைநகரில் பள்ளிகளை மூட முதல்வர் உத்தரவு – மஞ்சள் அலர்ட் விடப்பட்டதால் பொதுமக்கள் பரபரப்பு!!

0

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுத்துள்ளதை அடுத்து, பள்ளிகளை மூட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முதல்வர் உத்தரவு :

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இது போக, கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பல பகுதிகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், நம் தலைநகர் டெல்லியில் அண்மையில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 0.55 சதவீதமாக இருந்த தொற்று பரவல் விகிதம், திங்கட்கிழமை 0.68 சதவீதமாக அதிகரித்தது.

இதனால் அங்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 20 நபர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும், பேருந்து மற்றும் மெட்ரோ உள்ளிட்ட இடங்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here