கோழிக்கோடு பல்கலையில் தாங்கள் வரதட்சணை பெற மாட்டோம் என மாணவர்களின் உறுதிமொழிக்கு அடுத்தே அவர்களுக்கு கல்லூரி சார்ந்த பட்டம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி பட்டம் ரத்து :
திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பாக வரதட்சணை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், அரசு சார்பில் வரதட்சணை கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இன்னும் ஒரு சில இடங்களில் இந்த அவல நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதில், இந்த வரதட்சணை சம்பந்தமான முக்கிய அறிவிப்பு ஒன்றை கோழிக்கோடு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதாவது, இனி என் வாழ்வில் நான் வரதட்சணை பெற மாட்டேன் என மாணவர்கள் உறுதிமொழி படிவம் வழங்கிய பிறகே, அவர்களுக்கு கல்லூரி சார்ந்த பட்டம் வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் அவர்கள் வரதட்சணை பெற்றது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் பெற்ற பட்டம் பறிக்கப்படும் எனவும் அந்த பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்கலை நிர்வாகத்தின் இந்த வினோத அறிவிப்பு பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்