பாலிவுட் திரையுலகின், முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோனேவுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம், இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரையுலகில் பரபரப்பு :
பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர், நடிகை தீபிகா படுகோனே. இவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கோச்சடையான் என்று 3டி படத்தில் நடித்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார். தற்போது இவர், பிரபல பாலிவுட் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது நடிகை தீபிகா படுகோனேவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காமினேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தீவிர ஓய்வில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில், பிரபல நடிகைக்கு ஏற்பட்ட இந்த மாரடைப்பால் ஷூட்டிங் அதிரடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்