தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் திரையுலகம்!!

1

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே முக்கிய பிரபலங்கள், திரை உலகினரிடையே மிக அதிகமான அளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் பிரபல நடிகையான தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீபிகா படுகோன்:

சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரையும் கொரோனா நோய்த்தொற்று மிக கடுமையான அளவில் பாதித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கானவர்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது அனைத்து உலக நாட்டிலும் மக்களை பாதுகாக்கும் வகையில் பல வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருந்தும் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் முழு ஊரடங்கு??பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை!!

சமீப நாட்களாக நாட்டில் அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் இடையே கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் பிரபல நடிகையான தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இவரது தாய், தந்தை சகோதரிக்கு தொற்று கண்டறிப்பட்ட நிலையில் தற்போது தீபிகாவிற்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் அமைப்பான ஐஎஃப்எஃப்ஏ தெரிவித்துள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here