பாலிவுட்டில் தற்போது இருக்கும் முக்கிய நாயகிகளில் ஒருவர் என்றால் அது தீபிகா படுகோன் தான். இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ராம் லீலா, ரேஸ் 2 ஆகிய பல படங்கள் நல்ல வெற்றி பெற்றது. இவர் அடிக்கடி தன் சக நடிகருடன் காதல் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். மேலும் இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால் இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இவர் 2018 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். பாலிவுட்டில் தற்போது இவர்கள் ஒரு ஸ்டார் தம்பதிகளாக வலம் வருகிறார்கள். இந்நிலையில் தீபிகா தன் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதாவது “ரன்விரை சந்திப்பதற்கு முன்பே கடந்த கால அனுபவங்களை வைத்து திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என முடிவில் இருந்ததாகவும். அதோடு கண்டிப்பாக ஒரு சினிமா ஹீரோவை மணந்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்’ என கூறியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் ‘என் உடன் நல்ல நட்பாக இருந்தவர்கள் கூட என்னை ஏமாற்றிவிட்டு போனார்கள். இந்த வலியுடன் நான் இனிமேல் மற்றவர்களிட்மிருந்து விலகி இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் ரன்வீர் எல்லாத்தையும் மாற்றிவிட்டார். திருமணம் மரியாதை தற்போது அதிகரித்துள்ளது’ என வெளிப்படையாக பேசியுள்ளார். திருமணம் குறித்த இவரின் கருத்துக்கள் தற்போது இணையத்தில் அதிகம் பேசுபொருளாகி உள்ளது. மேலும் ஏன் இவ்வளவு வெறுப்பாக தீபிகா திருமணத்தை நினைத்துள்ளார். அப்படி என்ன அவர் வாழ்வில் நடந்தது என சர்ச்சையும் எழுந்துள்ளது.