இந்த ஆண்டு தீபாவளிக்கு இது டவுட் தான் – கடுமையான விலை உயர்வால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

0
இந்த ஆண்டு தீபாவளிக்கு இது டவுட் தான் - கடுமையான விலை உயர்வால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

பல்வேறு கட்டுப்படுகளாலும், பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளதாலும் சிவகாசி பட்டாசுகளின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பட்டாசு விலை உயர்வு:

இன்னும் 2 மாதங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. இந்தப் பண்டிகையின் முக்கிய, கொண்டாட்டமாக இருப்பது பட்டாசுகள் தான். ஆனால் அந்த பட்டாசு, இந்த ஆண்டு அனைவருக்கும் கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. சிவகாசி பட்டாசுகளின் விலை, இந்த ஆண்டு 25 முதல் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கணேசன், நீதிமன்றத்தின் கடும் கட்டுப்பாடுகளாலும், மூலப் பொருட்களின் விலை உயர்வாலும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது. 70% ஊழியர்களுக்கு மட்டுமே, வேலை கொடுக்கும் நிலை உருவாகியுள்ளதால் இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை கடுமையாக உயரும் என தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் டெல்லியில், அடுத்த ஜனவரி மாதம் வரை பட்டாசு உற்பத்தி செய்யவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால், பட்டாசு தொழிலாளர்களின் மொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here