பொதுவாக இந்தியாவில் தீபாவளி பண்டிகையின்போது வீடுகள் தோறும் தீபங்கள் ஏற்றி பலரும் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் வருகிற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், இப்போதே பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு அதிகரிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கவும் அனுமதி அளித்தது. அதன்படி தமிழகத்தில் காலை நேரத்தில் 6 to 7 மணி வரையும், இரவு நேரத்தில் 7 to 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் காலை 6 to 7 மற்றும் இரவு 7 to 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக மகளிர்களே…, இதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…, வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!