பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களின் தலையாய கோரிக்கைக்கு செவிசாய்த்த மத்திய அரசு!!

0
பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களின் தலையாய கோரிக்கைக்கு செவிசாய்த்த மத்திய அரசு!!
பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களின் தலையாய கோரிக்கைக்கு செவிசாய்த்த மத்திய அரசு!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டங்களை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டம்:

இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் (OPS) கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வின் போது பெற்ற ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் ஓய்வூதியமாக பெற்று வந்தனர். ஆனால் கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில் இத்தகைய சலுகைகள் இடம்பெறுவது இல்லை. இதனால் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை கருத்தில் கொண்டு பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் OPS-ஐ மீண்டும் அமல் படுத்தி வருகின்றனர். இப்படி அரசு ஊழியர்களின் தலையாய கோரிக்கையாக தொடர்ந்து வருவதால் 2023 ம் ஆண்டுக்கான நிதி மசோதாவை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை (NPS) ஆய்வு செய்ய நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.

ஏப்ரல் 5ம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்தக் குழு மூலம் அரசு ஊழியர்களிடம் கருத்து கேட்பு நடத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் ஆறுதலை தருமா? மீண்டும் எதிர்ப்பை காட்டுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here