தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு டிசம்பர் 8ம் தேதி ரெட் அலர்ட்.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு டிசம்பர் 8ம் தேதி ரெட் அலர்ட்.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு டிசம்பர் 8ம் தேதி ரெட் அலர்ட்.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

சமீபகாலமாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட்:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில் தற்போது வரை சில முக்கிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதுமட்டுமின்றி கடலோர பகுதிகளில் தென்மேற்கு பகுதிகளிலும் அடை மழை விடாமல் பெய்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பொதுவாக அதிகாலையில் சுட்டெரிக்கும் வெப்பத்துடன் நாள் ஆரம்பித்து, மாலை கனமழை பெய்து வருவது வழக்கமாக நடக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் தமிழகத்தில் உள்ள சில முக்கிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தவறாக தொட்ட நபரை செவுளில் அடித்த பொன்னியின் செல்வன் நடிகை.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற டிசம்பர் 8ம் தேதி விடாமல் தொடர்ந்து கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் இந்த அனைத்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here