கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா நவம்பர் 24ம் தேதி முதல் டிசம்பர் 3ந் தேதி வரை மலையாள திருப்பலி, தேர்பவனி, பெருவிழா திருப்பலி போன்ற நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று பரவல் மூலம் இவ்விழாக்கள் கோவிலுக்குள் நடைபெற்றது. தற்போது தடைகள் நீங்கிய நிலையில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரு விழாவை சிறப்பித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
நவம்பர் 24 ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவில் டிசம்பர் 3ம் தேதி பெருவிழா திருப்பலியை ஆயன் நசரேன் சூசை நிறைவேற்றுவார் . இதை காண பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவனையெல்லாம் மிருகத்த வச்சு டார்ச்சர் செஞ்சே கொல்லனும் .., சகிலாவிடம் கொந்தளித்த வனிதா!!
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ந் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவித்தும், விடுமுறைக்கு ஈடாக ஜனவரி மாதம் 4வது சனிக்கிழமை (28.01.2023) அன்று வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.