குண்டு மனிதர்களை தேடி தேடி வேலை தரும் வினோத நிறுவனம்.. வெறும் ஒருமணி நேரத்திற்கு ரூ.1,300 வரை சம்பளம்!!!

0

Debucari என்ற ஜப்பானிய நிறுவனம் 100 கிலோவுக்கும் மேலான மனிதர்களை தங்களிடமிருந்து வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தார் இதற்காக ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 2000 (ரூ.1300) ஜப்பானிய யென்கள் கட்டணமாக நிர்ணயித்துள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Debucari என்ற இந்த நிறுவனத்தை பிலிஸ் என்ற நபர் தொடங்கியுள்ளார். இவர் ஏற்கனவே பிளஸ் சைஸ் நபர்களுக்கான ஆடை நிறுவனமான Qzilla-வை 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். 100 கிலோவுக்கும் மேலான மனிதர்களை தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தங்களிடமிருந்து வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

 

மேலும் Debucari நிறுவனத்தில் சேர விரும்புபவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 100 கிலோவுக்கு மேல் எடை கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும்.  ஆண், பெண் என இருபாலரும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை முழுவதும் வாடகைக்கு எடுக்கப்படும் நபருக்கே அளிக்கப்படும் எனவும், கார்பரேட்களிடமிருந்து கமிஷனாக பெறப்படும் தொகையை மட்டுமே தாங்கள் எடுத்துக் கொள்வோம் எனவும் இந்நிறுவனத்தின் தலைவர் பிலிஸ் கூறியுள்ளார்.

Debucari நிறுவனத்திடம் தற்போது ஜப்பானின் தலைநகர் டோக்யோ, ஒசாகா மற்றும் அய்சி போன்ற நகர்களில் உள்ள குண்டு நபர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் “Debucari” -ன் விளம்பரங்களில் எங்குமே குண்டு நபர்களை அநாகரிகமாகவோ, அவமதிக்கும் வகையிலோ குறிப்பிடவில்லை என்றும் இதனை பாசிட்டிவாகவும், குண்டு நபர்களை அதிகாரப்படுத்தும் வகையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பிலிஸ் தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here