ஒன்றிய அரசின் மீது தயாநிதி மாறன் குற்றசாட்டு – தமிழகம் மீது அக்கறை இல்லை!!!

0

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மற்றும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் அனைவர்க்கும் தடுப்பூசி போட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திற்கு மட்டும் தடுப்பூசி மிக மிக குறைந்தளவில் வழங்கப்படுவதாக மத்திய அரசு மீது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை…

கொரோனா நோயிடம் இருந்து பாதுக்காகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன, மத்திய அரசால் அனைத்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது, கடந்த சில நாட்களாக தமிழக்த்தில் தடுப்பூசி பற்றாக்குறையாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு தமிழக்த்திற்கு மட்டும் மிக குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது, இதுகுறித்து ஒன்றிய அரசின் மீது தயாநிதி மாறன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை...
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை…
ஒன்றிய அரசை குற்றம் சாட்டிய தயாநிதி மாறன்…

சென்னை நுங்கம்பாக்கத்தில் 100க்கும் மேற்பட்ட சிகை அலங்காரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், உறுப்பினர் எழிலன், தென்சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு ஆகியோர் கலந்துகொண்டனர். விழா நடைபெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார் தயாநிதி மாறன். அப்பொழுது கொரோனா ஊரடங்கின் பொது மக்கள் யாரும் பாதிக்க கூடாது, உணவு இல்லாமல் தவிக்க கூடாது அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார், அவரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்த அனைவரும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஒன்றிய அரசை குற்றம் சாட்டிய தயாநிதி மாறன்...
ஒன்றிய அரசை குற்றம் சாட்டிய தயாநிதி மாறன்…

இந்நிலையில் அதிகளவில் இருந்த கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு குறியானது வருகிறது மற்றும் கொரோனாவால் உயிரிழந்து வருவோரின் எண்ணிக்கையும் முழுமையாக குறைந்துவிட்டது. இந்நிலையில் மக்கள் அனைவர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன, தமிழகத்திற்கு ஒன்றிய மூலமாக தடுப்பூசிகள் வழங்கபட்டு வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு உலக நாடுகளுக்கு வழங்குவதை விட தமிழக்த்திற்கு மட்டும் மிகமிக குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசிகளை வழங்கிவருவதாக குற்றம் கூறியுள்ளார். மற்றும் மக்கள் அனைவரும் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் கொரோனா இல்லை குறைந்துவிட்டது என்று எண்ணாமல் 3வது அலை வராமலா தடுக்க வேண்டும். எனவே முகக்கவசம், சமூக இடைவெளி என அரசின் அனைத்து விதிமுறைகள் கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு கூறினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here