உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் அரங்கேறும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிகழ்வை பார்க்க ஏராளமான மக்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் இந்தாண்டுக்கான மதுரை சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 26ம் தேதி சப்பர முகூர்த்ததுடன் தொடங்கவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு., உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
இந்த நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வதால் நவீன தொழில்நுட்ப முறையில் பாதுகாப்பு பலப்படுத்தவும் ஏற்பாடு செய்ய உள்ளனர்.மேலும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி மே 5ம் தேதி சித்ரா பௌர்ணமி நாளில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.