உத்தரபிரதேசத்தில் தலித் பெண் ஒருவர் மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார், இதனால் அந்த சிறுமி மீது கோபம் அடைந்த குடும்பத்தினர் அவரை கொலை செய்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாலியல் வன்கொடுமை:
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயதான தலித் சிறுமி. அவரை அவரது கும்பத்தினர் படிக்கச் வைக்காமல் வீட்டு வேளைக்கு அனுப்பி உள்ளனர். அவரும் தனது விவரம் தெரிந்த வயதில் இருந்து வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் யாரோ ஒரு மர்ம நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். இதனால் கர்ப்பமும் அடைந்துள்ளார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இந்த விவகாரம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. இந்த பெண்ணின் நடத்தையை பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தவறாக பேச குடும்பத்தினர் இந்த பெண் மீது கோபம் அடைந்துள்ளனர். தங்களுக்கு அவப்பெயர் வாங்கி தந்த பெண்ணை கொலை செய்ய அவரது தந்தை மற்றும் சகோதரர் இருவரும் திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு ஆற்றங்கரை பகுதியில் புதைத்துள்ளனர்.
போலீசில் புகார்:
சில நாட்களாக பெண்ணை காணவில்லை என்று சந்தேகம் அடைந்த கிராமத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்தினரை விசாரித்துள்ளனர். ஆரம்பத்தில் பெண் அவர்களது உறவினர் வீட்டில் இருப்பதாக கூறி வந்தவர்கள், பின் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனால் போலீசார் கொலை செய்தவர்களை கைது செய்துள்ளனர்.
இன்றைய தலைப்புச் செய்திகளின் சுருக்கம் – தவறாம படிங்க!!
அவர்கள் இருவர் மீதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி சட்டம் 302 மற்றும் 201 ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் புரிந்தவரை தண்டிக்காது, பாதிக்கப்பட்ட பெண்ணை தண்டித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.