கல்ல காதலுக்கு இடையூராக இருந்ததால் தன் சொந்த மகள்கள் இருவரையும் மின்சார வயர் மூலம் மினசாரம் பாய்ச்சி கொலை செய்த தந்தை. சரமாரியாக தாக்கி அடித்து போலீசாரிடம் பிடித்து கொடுத்த கிராமத்து மக்கள்.இப்படி ஒரு சம்பவம் நடந்தது அந்த கிராமத்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
மகள்களை கொலை செய்த தந்தை…
மேற்குவங்கம் மாநிலம் புர்பா பர்தமான் என்னும் மாவட்டத்திலுள்ள கலர்பூல் என்னும் கிராமம். இந்த கிராமத்தில் கணவன் மனைவி 8 மற்றும் 6 வயது உள்ள இரு மகள்கள் மற்றும் தாயாருடன் வசித்து வந்தது ஒரு குடும்பம். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். தன கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதால் அடிக்கடி சண்டை சச்சரவு வருவது வழக்கமா இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று தன் மகள்கள் இருவரும் வீட்டில் யாரும் இல்லை என்பதால் பாட்டி மட்டுமே இருந்ததால் வீட்டின் முன் பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்கு இருவரும் அலறும் சத்தம் கேட்டுள்ளது. அந்த அலரை கேட்ட அவர்களது பாட்டி ஓடி வந்து பாத்துள்ளார்.பேத்திகள் இருவரும் மின்சார வயர் மீது கால் வைத்ததும் மின்சாரம் பாய்ச்சிகிரது என்று அறிந்து உடனே மின்சார மெயின் பலகையை துண்டிக்க ஓடியுள்ளார், இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த கிராமத்து மக்கள் ஓடி வந்தனர் ஆனால் அதற்குள் இருவரும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துவிட்டனர்.
இதனை அறிந்து வீட்டிற்கு வந்த அவர்களது தாயார் இவர்கள் தெரியாமல் மின்சார வயர் மீது கால் வைக்கவில்லை இவர்களது தந்தைதான் திட்டமிட்டு வேண்டுமென்றே செய்துள்ளார் அதற்க்கு காரணம் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள காதல் உள்ளது இதனை அறிந்த நான் நமக்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கிறது என கூறி பலமுறை அவரை கண்டித்துள்ளேன், இதனால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வரும் எனது பிள்ளைகள் இருப்பது இவருக்கு இடையூராக இருக்கிறது இன்று கொஞ்சம் கூட தன மகள்கள் தான் என்று நினைத்து கூட பார்க்காமல் இவர் இப்படி கொலை செய்துவிட்டார் என அவர்களது தாயார் அலுத்து புலம்பி கூறினார்.
கிராம மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்
சம்பவம் நடந்தது தெரியாதது போல் அவர்களது வீட்டிற்கு வந்த தந்தையை கிரம மக்கள் சரமாரியாக தாக்கி அடித்து பின் போலீசாரிடம் தகவல் தந்து ஒப்படைத்தனர்.ஆனால் போலீசாரிடம் என்னை என் மனைவி வேண்டும் என்றே பொய் கூறி என்னை மாட்டிவிடுகிறாள் என்று கூறியுள்ளார். பின் அவரை கைது செய்து போலீசார் அழைத்து சென்று அவர்மீது குடும்ப வன்முறை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இதற்கிடையில் மின்சார வாரியத்திடம் சிறுமிகளின் உயிரிழப்புக்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளனர். மின்சாரம் தாக்கி இறந்தார்களா அல்லது தந்தைதான் கொலை செய்தாரா அல்லது மனைவி பொய் கூறுகிறாரே என்று குழப்பத்தில் போலீசாரும் ஊரு மக்களும் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்